china tamil vanoli mandram

Sunday, January 21, 2007

வொலுங் இயற்கை பாதுகாப்பு மண்டலம்


<<>>நான்காவ‌து க‌ட்டுரை <<>>

சுச்சுவான் மாநிலத்தில் வாழும் விலங்குகளின் பிரதிநிதியான பாண்டா பற்றி கூறுகின்றோம். செங்து நகரிலிருந்து சுமார் 100 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள வொலுங் இயற்கை பாதுகாப்பு மண்டலம், அதாவது பாண்டாவின் வீட்டுக்கு உங்களை அழைத்துச் செல்கின்றோம்.














சுமார் 20 ஆண்டுகளுக்கு முன், பாண்டாக்கள் மிகவும் விரும்பும் உணவுகளில் ஒன்றான, மிக அதிக நிலப்பரப்பில் வளரும் ஜியன்சு எனும் ஒரு வகை மூங்கில் இனம் அழிந்துவிட்டது, பாண்டாக்களின் எதிர்கால வாழ்வுக்காக, இந்த மூங்கில்களை மீண்டும் வளர்ப்பதற்காக பணம் திரட்டும் வகையில், சீன இசையமைப்பாளர்கள் முன்பு நீங்கள் கேட்ட இந்த பாடலை இயற்றினர். இப்பொழுது, வொலுங் இயற்கை பாதுகாப்பு மண்டலத்தில் இந்த வகை மூங்கில் செழிப்புடன் வளர்கின்றது. இயற்கையில் மிகவும் பழமை வாய்ந்த மிக அரிதான விலங்கான பாண்டாக்கள் மிகவும் இன்பமாகவும் எந்த கவலையின்றியும் வாழ்கின்றன.


சுச்சுவான் மாநிலத்தின்
வட மேற்கு பகுதியில்
அமைந்துள்ள வொலுங்
இயற்கை பாதுகாப்பு
மண்டலம், பாண்டாக்கள்
முக்கியமாக வாழும்
இடங்களில் ஒன்றாகும்.

எனவே, சுச்சுவான் மாநிலம்,

பாண்டாக்களின் ஊர் என கருதப்படுகின்றது.

சுச்சுவான், ஷென்சி மாநிலங்களிலும் கான்சு மாநிலத்தின்
ஒரு பகுதியிலும் உள்ள மலைப் பிரதேசங்களில் தான்
காட்டு பாண்டாக்களை மக்கள் காண முடியும். எனவே,
சீன மற்றும் வெளிநாட்டு பயணிகள், பாண்டாக்களை
நேராக பார்க்க வேண்டுமானால், அவர்கள் இயற்கை
பாதுகாப்பு மண்டலத்திலுள்ள சீனப் பாண்டாத்
தோட்டத்துக்கு வர வேண்டும்.
இந்த மண்டலத்தின் பொறுப்பாளர்
சாங் லி மிங் கூறியதாவது-


பாண்டாக்கள் தொடர்ந்து ஆரோக்கியமாக
வாழ்வதற்கு உதவி
செய்து, உலகில்
பாண்டாவை
விரும்புவோருக்கு,
பாண்டாவை நேரில்
பார்க்கும் வாய்ப்பை
ஏற்படுத்துவதும்,

உயிரின வாழ்க்கை சூழலை பாதுகாப்பது ஏன்
என்பதை பயணிகளுக்கு தெரிவிப்பதும் எங்கள்
நோக்கமாகும் என்றார்.

நீண்டகாலமாக, பாண்டாவின் உருண்டையான உடல், மென்மையும் வேடிக்கையுமான செயல்பாடு, வெள்ளையும் கருப்பும் கலந்த தோற்றம் ஆகியவை மக்களை மிகுதியும் கவர்ந்து வருகின்றன. சீனத் தேசிய பாண்டா தோட்டத்தில் 100க்கும் அதிகமான பாண்டாக்கள் வளர்க்கப்படுகின்றன. இங்கு பல பாண்டாக்கள் வெளியே விளையாடுகின்றன, அவற்றில் சில, சலுக்கல் ஏணியில் விளையாடுகின்றன. சில, சூரிய ஒளியில் பாறையின்மீது சார்ந்திருக்கின்றன. வேறு சில, மரங்களில் ஏறி, கஷ்டமான விளையாட்டுகளில் ஈடுபடுகின்றன

அமெரிக்காவிலிருந்து வந்த Rebecca Haase அம்மையார், பாண்டாக்கள் சாப்பிடுவது, நீர் குடிப்பது, மற்றும் விளையாடுவதை பார்த்ததும் படம் பிடித்தார். அவர் பாண்டாவை முதல் முறை நேரடியாக பார்ப்பதில் மிகவும் மகிழ்ச்சியடைகின்றார். அவர் கூறியதாவது-

நான் இங்கு வந்து
பாண்டாக்களை
நேராக பார்ப்பதில்
மிகவும்
மகிழ்ச்சியடைகின்றேன்.

அவை பார்த்தால் மிகவும் ஆரோக்கியமாகவும் பிரியமுள்ளதாகவும்

இருக்கின்றன.

வொலுங் இயற்கை பாதுகாப்பு மண்டலத்தில் மேலும்
கூடுதலான பாண்டாக்கள் இருக்க வேண்டும் என்று விரும்புகின்றேன்.

சீனப் பாண்டாத் தோட்டத்தில் முன்னேறிய சாதனங்களுடன் கூடிய ஒரு குட்டி வளர்ப்பு அறை உண்டு, இதில் குட்டி பாண்டாக்கள் வளர்க்கப்படுகின்றன.

சீன தைவானிலிருந்து வந்த திரு சாங் சி சாங் அவர்கள் இந்த அறையை அதிக நேரம் பார்த்தார். பணியாளர்கள் குட்டி பாண்டாக்களுக்கு பாலை ஊட்டிய முழு போக்கையும் அவர் பார்வையிட்டார். அவர் கூறியதாவது-



சுச்சுவான் மாநிலத்தில்

வாழும் விலங்குகளின்
பிரதிநிதியான பாண்டா
பற்றி கூறுகின்றோம்.

செங்து நகரிலிருந்து சுமார்
100 கிலோமீட்டர் தொலைவில்
அமைந்துள்ள வொலுங் இயற்கை
பாதுகாப்பு மண்டலம், அதாவது
பாண்டாவின் வீட்டுக்கு உங்களை
அழைத்துச் செல்கின்றோம்.

சுமார் 20 ஆண்டுகளுக்கு முன், பாண்டாக்கள் மிகவும் விரும்பும் உணவுகளில் ஒன்றான,மிக அதிக நிலப்பரப்பில் வளரும் ஜியன்சு எனும் ஒரு வகை மூங்கில் இனம் அழிந்துவிட்டது, பாண்டாக்களின் எதிர்கால வாழ்வுக்காக, இந்த மூங்கில்களை மீண்டும் வளர்ப்பதற்காக பணம் திரட்டும் வகையில், சீன இசையமைப்பாளர்கள் முன்பு நீங்கள் கேட்ட இந்த பாடலை இயற்றினர்.

இப்பொழுது, வொலுங் இயற்கை பாதுகாப்பு மண்டலத்தில் இந்த வகை மூங்கில் செழிப்புடன் வளர்கின்றது. இயற்கையில் மிகவும் பழமை வாய்ந்த மிக அரிதான விலங்கான பாண்டாக்கள் மிகவும் இன்பமாகவும் எந்த கவலையின்றியும் வாழ்கின்றன.

சுச்சுவான் மாநிலத்தின் வட மேற்கு பகுதியில் அமைந்துள்ள வொலுங் இயற்கை பாதுகாப்பு மண்டலம், பாண்டாக்கள் முக்கியமாக வாழும் இடங்களில் ஒன்றாகும். எனவே, சுச்சுவான் மாநிலம், பாண்டாக்களின் ஊர் என கருதப்படுகின்றது. சுச்சுவான், ஷென்சி மாநிலங்களிலும் கான்சு மாநிலத்தின் ஒரு பகுதியிலும் உள்ள மலைப் பிரதேசங்களில் தான் காட்டு பாண்டாக்களை மக்கள் காண முடியும். எனவே, சீன மற்றும் வெளிநாட்டு பயணிகள், பாண்டாக்களை நேராக பார்க்க வேண்டுமானால், அவர்கள் இயற்கை பாதுகாப்பு மண்டலத்திலுள்ள சீனப் பாண்டாத் தோட்டத்துக்கு வர வேண்டும். இந்த மண்டலத்தின் பொறுப்பாளர் சாங் லி மிங் கூறியதாவது-

பாண்டாக்கள் தொடர்ந்து ஆரோக்கியமாக வாழ்வதற்கு உதவி செய்து, உலகில் பாண்டாவை விரும்புவோருக்கு, பாண்டாவை நேரில் பார்க்கும் வாய்ப்பை ஏற்படுத்துவதும், உயிரின வாழ்க்கை சூழலை பாதுகாப்பது ஏன் என்பதை பயணிகளுக்கு தெரிவிப்பதும் எங்கள் நோக்கமாகும் என்றார்.


நீண்டகாலமாக, பாண்டாவின் உருண்டையான உடல், மென்மையும் வேடிக்கையுமான செயல்பாடு, வெள்ளையும் கருப்பும் கலந்த தோற்றம் ஆகியவை மக்களை மிகுதியும் கவர்ந்து வருகின்றன. சீனத் தேசிய பாண்டா தோட்டத்தில் 100க்கும் அதிகமான பாண்டாக்கள் வளர்க்கப்படுகின்றன. இங்கு பல பாண்டாக்கள் வெளியே விளையாடுகின்றன, அவற்றில் சில, சலுக்கல் ஏணியில் விளையாடுகின்றன. சில, சூரிய ஒளியில் பாறையின்மீது சார்ந்திருக்கின்றன. வேறு சில, மரங்களில் ஏறி, கஷ்டமான விளையாட்டுகளில் ஈடுபடுகின்றன

அமெரிக்காவிலிருந்து வந்த Rebecca Haase அம்மையார், பாண்டாக்கள் சாப்பிடுவது, நீர் குடிப்பது, மற்றும் விளையாடுவதை பார்த்ததும் படம் பிடித்தார். அவர் பாண்டாவை முதல் முறை நேரடியாக பார்ப்பதில் மிகவும் மகிழ்ச்சியடைகின்றார். அவர் கூறியதாவது-

நான் இங்கு வந்து பாண்டாக்களை நேராக பார்ப்பதில் மிகவும் மகிழ்ச்சியடைகின்றேன். அவை பார்த்தால் மிகவும் ஆரோக்கியமாகவும் பிரியமுள்ளதாகவும் இருக்கின்றன. வொலுங் இயற்கை பாதுகாப்பு மண்டலத்தில் மேலும் கூடுதலான பாண்டாக்கள் இருக்க வேண்டும் என்று விரும்புகின்றேன்.
சீனப் பாண்டாத் தோட்டத்தில் முன்னேறிய சாதனங்களுடன் கூடிய ஒரு குட்டி வளர்ப்பு அறை உண்டு, இதில் குட்டி பாண்டாக்கள் வளர்க்கப்படுகின்றன. சீன தைவானிலிருந்து வந்த திரு சாங் சி சாங் அவர்கள் இந்த அறையை அதிக நேரம் பார்த்தார். பணியாளர்கள் குட்டி பாண்டாக்களுக்கு பாலை ஊட்டிய முழு போக்கையும் அவர் பார்வையிட்டார். அவர் கூறியதாவது-
சீனத் தேசிய பொக்கிஷமான பாண்டாக்கள் பற்றி இந்த முறை அதிகம் அறிந்துகொண்டேன், பாண்டா பற்றிய கதை, வளரும் சூழ்நிலை ஆகியவற்றை வழிகாட்டி ஒருவர் எங்களிடம் தெரிவித்தார். பண்டாக்கள் இனப்பெருக்குவது மிகவும் கஷ்டம், தாய் பாண்டாவுக்கு தன் குட்டியை வளர்க்கவும் தெரியாது என்றார் அவர்.
பாண்டாக்கள் மிகவும் பிரியமுள்ளவை. மேன்மேலும் கூடுதலான பயணிகள் சில நேரங்களை செலவழித்து வொலுங்கிற்கு வந்து தொண்டர்களாக பணிபுரிய விரும்புகிறார்கள். வளர்ப்பாளரின் ஆடையை அணிந்த ஜப்பானியர் Kodama Midori அவர்களில் ஒருவராவார். தம்முடன் சேர்ந்து மொத்தம் மூன்று பேர் வந்துள்ளதாகவும், பாண்டாக்களுடன் ஒரு வாரம் கழிக்கவுள்ளதாகவும் அவர் கூறினார்.
நான் நாள்தோறும் காலையில் பாண்டாவுக்கு உணவு ஊட்டுகின்றேன், மதியமும் இரவிலும் அறையை சுத்தம் செய்து, கழிவுகளை அகற்றுகின்றேன். சாதாரண நாட்களில் பாண்டாகள் கிட்ட இருப்பது சாத்தியமாகாது. எனவே, இந்த முறை நான் மிகவும் மகிழ்ச்சியடைகின்றேன் என்றார் அவர்.


உண்மையில் வொலுங்கில் வேறுபட்ட பருவங்களில், பாண்டாக்களின் வேறுபட்ட வளர்ப்பு கட்டத்தை கண்டறியலாம். கோடைக்காலத்தில் வொலுங்கில் குளிர்ச்சியாக இருக்கிறது. இக்காலகட்டம் பாண்டாக்கள் மிகவும் சுறுசுறுப்பாக செயல்படும் காலமாகும். இலையுதிர் காலத்தில், பாண்டாக்கள் குட்டிகளை பிரசவிக்கும் முழு போக்கையும் பயணிகள் பார்க்கலாம். வசந்த காலத்தில் பாண்டா இனபெருக்கம் செய்யும் காலகட்டமாகும். இதில் பல காதல் காட்சிகள் உண்டு.


வளர்ப்பு பாண்டாக்கள் தவிர, தற்போது, வொலுங் இயற்கை பாதுகாப்பு மண்டலத்தின் காடுகளில், 100க்கும் அதிமான காட்டு பாண்டாக்கள் வளர்கின்றன. உலகில் உள்ள பாண்டாக்களின் மொத்த எண்ணிக்கையில் இது பத்தில் ஒரு பகுதியாகும். உயர் நிலை பயணிகளுக்கு சேவை செய்யும் வகையில், அண்மையில் இந்த இயற்கை பாதுகாப்பு மண்டலத்தில் பாண்டாக்களின் வாழ்க்கை பற்றிய உலகின் முதலாவது ஆராய்ச்சி நடவடிக்கை துவங்கியுள்ளது. அவர்கள் அறிவியல் திறனுடைய கண்காணிப்பு கருவிகள் மூலம் காட்டிலுள்ள பாண்டாக்களின் வாழ்க்கை நிலையை நேரில் பார்க்கலாம்.


அடுத்து, இரண்டு வினாக்கள்:-


1. பாண்டாவின் ஊர், சுச்சுவான்

மாநிலத்தில் உள்ளதா?


2. வொலுங் இயற்கை பாதுகாப்பு

மண்டலத்தில் எத்தனை காட்டு பாண்டாக்கள் உள்ளன?


-க செந்தில்

0 Comments:

Post a Comment

<< Home